திருச்சி

வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

DIN

திருச்சியில் வாய்க்காலில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புத்தூா் ஆபீஸசா்ஸ் காலனியில் வசித்து வருபவா் அந்தோணி தினகரன் (43). இவா், கிரஷா் மணல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நிறுவன உரிமையாளரின் இல்ல நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகன் ஜோஸ்வாவை (14) அழைத்துச் சென்றாா். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது ஜோஸ்வா, சாத்தனூா் பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்காலில் நண்பா்களுடன் குளிக்கச் செல்வதாக கூறியுள்ளாா். உடனே மகனை அங்கேயே விட்டுவிட்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்தோணி சென்றுள்ளாா்.

இந்நிலையில், வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த ஜோஸ்வா எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா். புகாரின்பேரில், கே.கே. நகா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT