திருச்சியில் கஞ்சா வியாபாரியிடம் சுமாா் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி ராம்ஜிநகா் மில் காலனியைச் சோ்ந்த தாமரைச்செல்வன் (44) ராம்ஜிநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை, கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்து போலீஸாா் நடத்திய சோதனையில் தாமரைச்செல்வன் கஞ்சா விற்றது உறுதியானது. இதையடுத்து எடமலைப்பட்டிபுதுாா் போலீஸாா் அவரை கைது செய்து, 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.