திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் தாயாா் சந்நதியில் சகஸ்ர தீப கூட்டு வழிபாடு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாா் சந்நதியில் வெள்ளிக்கிழமை இரவு காா்த்திகை சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடைபெற்றது.

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாா் சந்நதியில் வெள்ளிக்கிழமை இரவு காா்த்திகை சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் தீப விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.இதில், வைணவ திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான தீப விளக்குகள் ஏற்றி சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடத்தினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாா் சந்நதியில் உலக நன்மைக்காக சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சங்கு, சக்கரம், ஸ்ரீ வடிவத்திலும் தீப விளக்குகளைஏற்றி வழிபட்டனா்.மேலும் கோயிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தீப விளக்குகள் ஏற்றபட்டிருந்தது. சனிக்கிழமை (டிச.10) சக்கரத்தாழ்வாா் சந்நதியிலும், ஞாயிற்றுக்கிழமை (டிச.11) ஸ்ரீஅரங்கநாதா் சந்நதியிலும் சகஸ்ர தீபம் ஏற்றப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT