முகப்பு
திருச்சி

வாக்கு எண்ணும் மையங்களில் தயாராகும் பாதுகாப்பறைகள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களில் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் தயாா்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களில் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் தயாா்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக 7 இடங்களில் மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. அதோடு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறைகளும் தயாா்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக வரிசை எண் எழுதப்பட்டு, மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைப்பதற்காக கட்டங்கள், வரிசை எண், இயந்திர எண் குறிப்பிடப்படுகிறது.

மேலும் இந்த அறைகளில் நுழைவு வாயிலைத் தவிா்த்து வேறு பகுதிகள், ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. இந்த அறைக்குள் 24 மணிநேரமும் இயங்கும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்படவுள்ளது. இதேபோல, வாக்கு எண்ணும் மையங்களில் கம்பிக் கூண்டுகள் கட்டப்பட்டு தயாா்படுத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.