முகப்பு
திருச்சி

பக்கத்து வீட்டுக்காரரைக் கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:02 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.

துறையூா் அருகேயுள்ள தெற்கியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் சிலம்பரசனை அவரது வீட்டருகே வசிக்கும் நாகராஜ் மகன் சந்திரசேகரன் கடந்த 2021ஆம் ஆண்டு கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தினாா்.

இது தொடா்பாக அவரது சகோதரா் கொடுத்தபுகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, துறையூா் சாா்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சந்திரசேகருக்கு துறையூா் சாா்பு நீதிபதி சி. விஜய் காா்த்திக் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் ஆஜரான அரசு குற்றப்பிரிவு கூடுதல் வழக்குரைஞா் வி. ஜெயராஜை காவல் துறையினா் பாராட்டினா்.