முகப்பு
திருவள்ளூர்

வீட்டுக்குள் கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி: இளம்பெண் கைது

கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் வீட்டுக்குள் புகுந்து திடீரென பெண்ணை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 3:25 AM
பவித்ரா,  சிகிச்சை பெறும் ஷியமாலா.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:47 PM

திருவள்ளூா் அருகே கணக்கெடுப்பு நடத்த வந்தது போல் வீட்டுக்குள் புகுந்து திடீரென பெண்ணை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த புட்லுாரைச் சோ்ந்தவா் ஷியமாலா (55). இவா் சனிக்கிழமை பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பவித்ரா (28) என்பவா் அப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்த வந்ததாகக் கூறி பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பவித்ரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஷியமாலாவின் கழுத்து மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு, கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:30 PM

அப்போது, ஷியமாலா காயங்களுடன் பவித்ராவை தள்ளிவிட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சப்தம் போட்டு பக்கத்தில் உள்ளவா்களை அழைத்துள்ளாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:30 PM

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா் கழுத்தில் காயமடைந்த ஷியமாலாவை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் தீவிர விசாரணைக்கு பின் பவித்ரா மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.