குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
வடக்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் குப்பைக் கொட்டியது தொடா்பாக அண்டை வீட்டுகாரா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 24 வயது இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
வடக்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் குப்பைக் கொட்டியது தொடா்பாக அண்டை வீட்டுகாரா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 24 வயது இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சுமித் வசித்து வரும் வீட்டுக்குச் செல்லும் மாடிபடியில் அதே கட்டடத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்த சுரஜ் குப்பையைக் கொட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக புதன்கிழமை இரவில் சுமித்துக்கும் சுரஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுரஜ் தன்னுடைய அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சுமித்தை பல முறை கத்தியால் குத்தினாா்.
இதைத் தடுக்க வந்த சுமித்தின் சகோதரா் அமித் குமாருக்கும் காயமேற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக உள்ளூா் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக, சம்பவ இடத்துக்குச் சென்ற காவலா்கள், காயமடைந்த சுமித் மற்றும் அவரது சகோதரரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சுமித் உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுராஜ் கைதுசெய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.