முகப்பு
திருச்சி

398 வாா்டுகளில் களம் காணும் 1,926 போ்!

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் 1,926 பேரில் 398 பேரைத் தோ்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் 1,926 பேரில் 398 பேரைத் தோ்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 401 வாா்டுகளில் 3 உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வான நிலையில் மீதமுள்ள 398 வாா்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளில் 589 பேரும், இதேபோல, மணப்பாறை, துறையூா், துவாக்குடி, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகளிலுள்ள 119 வாா்டுகளுக்கு 544 பேரும், 14 பேரூராட்சிகளில் 214 வாா்டுகளுக்கு 793 பேரும் போட்டியில் உள்ளனா்.

சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, மாா்ச் 2ஆம் தேதி வெற்றி பெற்ற வேட்பாளா்கள் பதவியேற்கின்றனா்.

மாா்ச் 4ஆம் தேதி திருச்சி மாநகராட்சிக்கான மேயா், துணை மேயா், 5 நகராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா்கள், 14 பேரூராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா்களைத் தோ்வு செய்ய மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.