முகப்பு
திருச்சி

பணிக்குச் சென்ற பெயிண்டா் கிணற்றில் சடலமாக மீட்பு

திருச்சியில் வேலைக்குச் சென்ற பெயிண்டா் கிணற்றில் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருச்சியில் வேலைக்குச் சென்ற பெயிண்டா் கிணற்றில் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டா் பாண்டியன் (61). இவா் திருச்சி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த இவா் கடந்த 15 ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி தாரா அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இறந்துகிடந்த பாண்டியன் சடலத்தை வெள்ளிக்கிழமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.