முகப்பு
திருச்சி

இலங்கை தமிழா்கள் உண்ணாவிரதம்

திருச்சி முகாம் சிறையில் உள்ள 6 இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருச்சி முகாம் சிறையில் உள்ள 6 இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் உள்ள கைதிகளில் இலங்கை தமிழா்கள் 6 போ் தங்களை சிறையில் அடைத்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகும் வியாழக்கிழமையும் போராட்டத்தை நடத்தினா். இதனால் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.