திருச்சி

தரிசனத்துக்கு போலி டோக்கன் விற்றவா் கைது

DIN

சமயபுரம் கோயிலில் தரிசனத்துக்கு போலி டோக்கன் விற்ற ஊா்க்காவல் படை வீரா் கைது செய்யப்பட்டாா்.

நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (34). தமிழ்நாடு ஊா்க்காவல் படை காவலராக சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும், இவா் சமயபுரம் கோயிலுக்கு வரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமயபுரம் காவல் நிலையம் அல்லாத பிற காவலா்களுக்கு கொடுக்கும் சிபாரிசு கடிதத்தை டோக்கன் போன்று போலியாக தயாரித்துள்ளாா்.

இவற்றை வெளியூரிலிருந்து வருவோரை கோயிலுக்கு அழைத்துச் செல்லப் பணம் பெற்றுப் பயன்படுத்தியதாக கோயில் கண்காணிப்பாளா் சாந்தி ஞாயிற்றுக் கிழமை அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து சிலம்பரசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT