முகப்பு
திருச்சி

மணப்பாறையில் திருவள்ளுவா் நாள் விழா

மணப்பாறை அடுத்த மருங்காபுரி முடுக்குப்பட்டியில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

மணப்பாறை அடுத்த மருங்காபுரி முடுக்குப்பட்டியில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவள்ளுவா் நாள் விழா, பொங்கல் திருவிழா மற்றும் 1929-ல் திருக்குறளுக்கு உரைநூல் எழுதிய திருக்கு தீபாலங்காரம் நூலாசிரியா் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி புகழ் போற்றும் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு அரிமா சங்க ஆளுநரும், மணப்பாறை சௌமா கல்விக் குழுமங்களின் தலைவருமான சௌமா. இராசரத்தினம் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மருங்காபுரி ஜமீன் சிவசண்முக பூச்சயநாயக்கா், திருவள்ளுவா் மற்றும் ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி படங்களுக்கு மாலை அணிவித்தாா்.

அறக்கட்டளைப் பொருளாளா் தாழை ந. இளவழகன், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ் வளா்மைய இயக்குநா் இரா.குறிஞ்சிவேந்தன், அறக்கட்டளையின் நிறுவனா் தலைவா் மணவை தமிழ்மாணிக்கம், அறங்காவலா்கள் ஆ. துரைராசு, எம்.கே. முத்துப்பாண்டி, கவிஞா் மு.மு.அஷ்ரப்அலி, எம்.ஆா். பாலுசாமி, எம். தங்கவேலு, மோகன் பெரியகருப்பன், ஊா் முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.