முறையான குடிநீா் விநியோகம் கோரி மறியல்
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புத்தாநத்தம் அண்ணா நகரில் கடந்த சில நாள்களாக காவிரி குடிநீா் முறையாக விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் அளித்த உறுதியைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.