கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி
கரோனா பாதிப்பால் திருச்சியில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.
கரோனா பாதிப்பால் திருச்சியில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 632 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 85,735 ஆக அதிகரித்த நிலையில் 80, 772 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 3847 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதில் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 77 வயது முதியவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1116 ஆக அதிகரித்துள்ளது.