முகப்பு
திருச்சி

ஆதித்தமிழா் பேரவை ஆா்ப்பாட்டம்

 மாவட்ட ஆட்சியரகம் அருகே திருச்சி மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 மாவட்ட ஆட்சியரகம் அருகே திருச்சி மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரவையின் மாவட்டச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். சோழன், மோகன்ராஜ், ரவி, அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம், வீரலூா் கிராமத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று இறந்த எங்கள் சமுதாயப் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுப்பாதையில் செல்ல முயன்றபோது, குறிப்பிட்ட சமுதாயத்தினா் எங்களைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்து தாக்கியதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எனவே எங்கள் இன மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் எங்கள் சமுதாய மக்களைத் தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் இத்தகைய போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்தனா். போராட்டத்தில் சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.