ரயில் நிலையத்தில் கரோனா விதி மீறல்களுக்கு அபராதம்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில், ரூ. 55,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில், ரூ. 55,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குள் முகக் கவசங்கள் அணியாத வகையில் மொத்தம் 110 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 55,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 100, 200 என அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அபராதம் ரூ. 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.