திருச்சி

எரிவாயு உருளையில் கசிவால் தீ விபத்து

DIN

துறையூா் அருகே வீட்டின் சமையலறையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

துறையூா் அருகேயுள்ள சித்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45) வீட்டில் சனிக்கிழமை சமையல் நடைபெற்றபோது, திடீரென

எரிவாயு உருளை ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதையடுத்து, ரமேஷ் குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியே ஓடினா். தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் சாக்கை நீரில் நனைத்து எரிவாயு உருளை மீது வீசி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனா். இதில் எரிவாயு உருளையுடன் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டா் சாதனம், எரிவாயு டியூப் தீயில் கருகியது. தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரு விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT