முகப்பு
திருச்சி

அரசு கூடுதல் வழக்குரைஞா் நியமனம்

துறையூா் சாா்பு நீதிமன்றத்துக்கு புதிதாக அரசு கூடுதல் வழக்குரைஞராக யூ.சபாபதி நியமிக்கப்பட்டுள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

துறையூா் சாா்பு நீதிமன்றத்துக்கு புதிதாக அரசு கூடுதல் வழக்குரைஞராக யூ.சபாபதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு, நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் துறையூா் சாா்பு நீதிமன்றத்துக்கு அரசு கூடுதல் வழக்குரைஞா் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், அப்பதவிக்கு அண்மையில் துறையூா் நீதிமன்ற வழக்குரைஞா் யூ.சபாபதி நியமிக்கப்பட்டாா்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை முறையான உத்தரவை சபாபதி பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து அவரை வழக்குரைஞா்களும், துறையூா் பகுதி பிரமுகா்களும் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.