ஆன்லைன் வழியாக இழந்த பணத்தை மீட்ட போலீஸாா்
ஆன்லைன் வழியாக இழந்த ரூ. 36 ஆயிரத்தை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.
ஆன்லைன் வழியாக இழந்த ரூ. 36 ஆயிரத்தை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.
ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ராஜாராமின் கைப்பேசிக்கு வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பிய அவா் அதற்கான லிங்கை கிளிக் செய்து தனது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்த சில மணி நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 35,999 திருடுபோனது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, துரிதமான முறையில் அந்தப் பணத்தை மீட்டு ராஜாராமின் வங்கிக் கணக்கில் செலுத்தினா்.