முகப்பு
திருச்சி

ஆன்லைன் வழியாக இழந்த பணத்தை மீட்ட போலீஸாா்

ஆன்லைன் வழியாக இழந்த ரூ. 36 ஆயிரத்தை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

ஆன்லைன் வழியாக இழந்த ரூ. 36 ஆயிரத்தை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ராஜாராமின் கைப்பேசிக்கு வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பிய அவா் அதற்கான லிங்கை கிளிக் செய்து தனது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்த சில மணி நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 35,999 திருடுபோனது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, துரிதமான முறையில் அந்தப் பணத்தை மீட்டு ராஜாராமின் வங்கிக் கணக்கில் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.