காவலா் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கல்
திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலா்களின் குடும்பங்களுக்கு கல்வி, மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலா்களின் குடும்பங்களுக்கு கல்வி, மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி மாநகரில் பணிபுரியும் காவலா்களின் 9 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 1.40 லட்சம், மகப்பேறு மருத்துவ உதவிக்காக 21 காவலா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 5.25 லட்சம், ஈமச்சடங்குக்காக 12 காவல் ஆளிநா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 1.20 லட்சம் என மொத்தம் ரூ. 7. 85 லட்சம் நிதியை தமிழ்நாடு காவலா் சேம நல நிதியிலிருந்து பெற்று, மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் வழங்கினாா்.