திருச்சி

திருச்சி கோயில்களில் பயங்கரவாத எதிா்ப்பு முன்னணி தலைவா் தரிசனம்

DIN

அகில இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணியின் தலைவா் எம்.எஸ். பிட்டா திருச்சி கோயில்களில் வியாழக்கிழமை வழிபட்டாா்.

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மனிந்தா்ஜீத் சிங் பிட்டா அகில இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணியின் தலைவராக உள்ளாா். ஏற்கெனவே தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாவலா்களுடன் தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் வந்துள்ள இவா் வியாழக்கிழமை காலை திருச்சி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா்.

உறையூா் வெக்காளியம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, சமயபுரம் மாரியம்மன், அக்கரைப்பட்டி தென் ஷீரடி சாய் பாபா கோயில்களுக்குச் சென்ற அவருக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பின்னா் அவா் தஞ்சாவூா் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT