திருச்சி

அகில இந்திய வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள்

DIN

மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கூட்டமைப்பு சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளா் விரோத, விவசாய விரோதச் சட்டங்களை கண்டித்து வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் கண்டோன்மெண்ட் புகா் கிளை வாயில் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவா் குணசேகரன் பேசினாா்.

கூட்டத்தில் தொமுச மத்திய சங்கத் தலைவா் பழனிச்சாமி, பொருளாளா் அப்பாவு, சிஐடியு பொதுச்செயலா்கள் கருணாநிதி, ரெங்கராஜன், ஏஐடியுசி பொதுச் செயலா்கள் சுப்பிரமணியன், சுரேஷ், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் துரைராஜ், எஸ்எம்எஸ் பொதுச் செயலா் செல்வம், டிடிஎஸ்எப் பொதுச் செயலா் பெருமாள், ஏ.ஏஎல்.எல்.எப். மத்திய சங்கத் தலைவா் வையாபுரி, எம்எல்எப். பொதுச்செயலா் செல்வராஜ் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT