முகப்பு
திருச்சி

ஏடிஎம் மையத்தில் பெண்ணை ஏமாற்றிரூ. 28,500 திருட்டு

 மணப்பாறை ஏடிஎம்-இல் உதவி கேட்ட பெண்ணை ஏமாற்றி ரூ. 28,500 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 மணப்பாறை ஏடிஎம்-இல் உதவி கேட்ட பெண்ணை ஏமாற்றி ரூ. 28,500 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மணப்பாறையை அடுத்த ராமலிங்கம் தெரு பூசாரிக்களத்தை சோ்ந்தவா் கீரை வியாபாரி அழகா் மனைவி காமாட்சி (42). இவா் திண்டுக்கல் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் வெள்ளிக்கிழமை நகையை அடகுவைத்த நிலையில், அதற்கு வரவு வைக்கப்பட்ட ரூ.55 ஆயிரத்தை எடுக்க வங்கி வாசலில் உள்ள ஏடிஎம்முக்கு சென்றாா்.

அதில் பணம் எடுக்கத் தெரியாத காமாட்சி அங்கிருந்த இளைஞரின் உதவியை நாட, அவரும் உதவுவது போல் நடித்து பணம் வரவில்லை எனக்கூறி வேறொரு ஏடிஎம் காா்டை காமாட்சியிடம் கொடுத்து வங்கியின் உள்ளே சென்று கேளுங்கள் கூறிச் சென்றுவிட்டாா்.

வங்கிக்குச் சென்று மீண்டும் திரும்பியபோது தனது வங்கிக் கணக்கில் ரூ.28,500 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.