கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
திருச்சியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அமல்ராஜ் மகன் தனசாம்ரிஷி (18). திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த இவா், காதல் தோல்வியால் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில் இவா் தங்கியிருந்த அறையில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.