முகப்பு
திருச்சி

மத்திய சிறை அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழா் போராட்டம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு அகதிகள் முகாமுக்கு தன்னைப் பாா்க்க வந்த மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கை தமிழா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி மத்திய சிறை சிறப்பு அகதிகள் முகாமுக்கு தன்னைப் பாா்க்க வந்த மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கை தமிழா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினாா்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் போலி கடவுச்சீட்டு, மோசடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள கெட்டியான் பாண்டியனை (42) பாா்க்க அவரின் மனைவி ரூபா மத்திய சிறைக்கு வியாழக்கிழமை வந்தாா்.

ஆனால் ரூபாவிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை காவல்துறையினா் முதலில் அனுமதிக்காத நிலையில், சிறிய வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதித்தனா். இதையறிந்த கெட்டியான் பாண்டியன் தன் மனைவியை போலீஸாா் தரக்குறைவாக பேசியதாகக் கூறி மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து வாசல் கதவுகளைத் தட்டிய சக கைதிகள் கதவை திறக்குமாறு கூச்சலிட்டனா். தகவலறிந்து வந்த கே.கே.நகா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்கள் சமாதானம் அடைந்தனா். சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.