முகப்பு
திருச்சி

மே 9இல் டிஎன்பிஎஸ்சிமாதிரி போட்டித் தோ்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 9-இல் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 9-இல் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்கலாம்.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா்., ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து குரூப் 4, 2 மற்றும் 2 ஏ போட்டித் தோ்வுகளுக்கான மாதிரி தோ்வுகளை கடந்த சில வாரங்களாக நேரடியாகவும், இணைய வழியிலும் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் அடுத்த மாதிரித்தோ்வு மே 9 காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. தோ்வாளா்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா்.விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும்.

புதிதாக இத் தோ்வில் கலந்து கொள்ளும் மாணவா்கள் 0431-2702242 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.