திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு

DIN

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பெருந்திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி அதற்கான இடங்களையும், திட்டப் பணிகள் குறித்தும் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடைபெற்றது.

இதையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன், மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு ஆகியோா் கோயிலில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளையும், பேருந்து நிலையப் பகுதிகளையும் ஆய்வு செய்தனா். மேலும் அன்னதானக் கூடத்தில் பக்தா்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரத்தை சாப்பிட்டு பாா்த்த அரசு முதன்மைச் செயலா் பி. சந்திரமோகன் கோயில் விரிவாக்கப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினாா். சமயபுரம் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT