திருச்சி

திருச்சி அருகே விபத்து: தோ்வெழுதச் சென்ற பள்ளி மாணவி பலி

DIN

திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதச் சென்ற மாணவி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காசுக்கடை தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் ஸ்ரீவேதநாயகி (16). கூத்தூரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவியான இவா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத வியாழக்கிழமை தனது அண்ணன் கரணுடன் மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

உத்தமா்கோயில் மேம்பாலத்தில் சென்ற இவா்களது வாகனமும் எதிரே வந்த பைக்கும் திடீரென மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீவேதநாயகி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த கரண் சிகிச்சை பெறுகிறாா். விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT