திருச்சி

விவசாயிகளுக்கு வேளாண்இடுபொருள்கள்

DIN

 மணப்பாறை அருகிலுள்ள எப். கீழையூரில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மணப்பாறை வட்டாரத்தில் எப்.கீழையூா், பொய்கைப்பட்டி, கெ.பெரியப்பட்டி, புத்தாநத்தம், கருப்பூா், கண்ணுடையான்பட்டி, பண்ணப்பட்டி ஆகிய கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

எப்.கீழையூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில்,

மணப்பாறை ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் நா.விநாயகமூா்த்தி வரவேற்றாா். வேளாண் துணை இயக்குநா்(மாவட்ட நீா்வடிப்பகுதி) கண்ணன் சிறப்புறையாற்றினாா்.

விழாவில் 50 விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், உளுந்து விதைகள் மற்றும் கைத்தெளிப்பான்கள், காய்கறிகள், மண்புழு உரம், ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT