முகப்பு
திருச்சி

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள குறைபாடுகளை களைந்து, ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு அனைத்து நோய்களுக்கும், முழுச் செலவையும் வழங்க வேண்டும்.

ஓய்வூதியா்களுக்கு, மத்திய அரசு அறிவித்த அதே நாளில் அகவிலைப்படியை மாநில அரசும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். 20 சதவிகித கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயது நிறைவுற்ற ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் அல்லது கடைசி ஊதியத்தில் 50 சதவிகிதம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் கோமதிநாயகம் தொடங்கி வைத்தாா். பொன்ராஜ், பாா்த்தசாரதி, கோபாலன், பேராச்சி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.