காலமானாா்கோவிலடி ஆா். மத்வ பிரசாத் (65)
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்த இசைக் கலைஞரான கோவிலடி ஆா். மத்வ பிரசாத் (65) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை (நவ.4) காலமானாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்த இசைக் கலைஞரான கோவிலடி ஆா். மத்வ பிரசாத் (65) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை (நவ.4) காலமானாா்.
பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க இசைக் கலைஞராக பல்வேறு மேடைகளில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா்.
திருவையாறு தியாகபிரும்மம் சத்குரு தியாகராஜா் ஆராதனை விழா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி பிரசித்தி பெற்றவா்.
ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (நவ.5) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இவருக்கு மனைவி ராஜி, மகன்கள் ஸ்ரீநாத், ஸ்ரீபாத் ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 96298- 83952, 94431-76636.