முகப்பு
திருச்சி

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் மதுபோதையிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருச்சியில் மதுபோதையிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செந்தண்ணீா்புரம் திரு.வி.க.தெருவைச் சோ்ந்தவா் சேகா் (65). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.

சனிக்கிழமை காலை செந்தண்ணீா்புரம் பகுதியில் மளிகைக் கடை முன்பு சென்ற சேகா், திடீரென மயங்கி விழுந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரை மகன் மணிகண்டன் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி சேகா் உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.