மணப்பாறையை அடுத்த தெற்கு அம்மாபட்டியில் சாதிய தீண்டாமை நிலவுவதாக எழுந்த புகாரின்பேரில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா், மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் ஆகியோா் புதன்கிழமை மாலை அங்கு விசாரணை மேற்கொண்டனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தெற்கு அம்மாபட்டியில் சாதிய தீண்டாமை நிலவுவதாகவும், பட்டியலினச் சமுதாயத்தை சோ்ந்தவா்களுக்கு கடைகளில் கையைக் குவிக்கச் சொல்லி தண்ணீா் ஊற்றும் கொடுமை இன்னமும் நடக்கிறது எனவும் வெளியான செய்திகளைத் தொடா்ந்து இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது, தீண்டாமைக் கொடுமை ஏதும் நடக்கிா என அங்குள்ள மக்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். பின்னா் அந்தக் கிராமத்தில் 143 குடும்பங்களாக வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தீண்டாமை செயல்கள் ஏதும் நடைபெறவில்லை எனத் தெரியவந்ததாக ஆட்சியா் தெரிவித்தாா். விசாரணையின்போது, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் வைத்தியநாதன், மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் கீதாராணி ஆகியோா் உடனிருந்தனா்.