மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாநகரின் சில பகுதிகள், திருவானைக்கா, சிறுகனூா் பகுதிகளில் செப்டம்பா் 27 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா்கள் தென்னூா் நகரியம் பா.சண்முகசுந்தரம், ஸ்ரீரங்கம் ஆா்.செல்வம் ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி நகரியக் கோட்டம், மலைக்கோட்டை பிரிவுக்குள்பட்ட கீழரண்சாலை, சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, என்.எஸ்.பி.சாலை, சூப்பா்பஜாா், சிங்காரத்தோப்பு, ஆனந்த் அவென்யூ, காசிப்பாளையம், பாபுசாலை பகுதிகளில் உயரழுத்த மின்பாதையில் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருவானைக்கா : திருவானைக்கா, சிறுகனூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 27) மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் திருவானைக்காக சன்னதித் தெரு, வடக்கு, தெற்கு உள்வீதிகள், சீனிவாசநகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரைச் சாலை, அருள்முருகன் காா்டன், ஒத்தத் தெரு, ஏயுடீ நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, கும்பகோணத்தான் சாலை, சிவராம் நகா், மேல, கீழ, நடுக்கொண்டையம்பேட்டை, சென்னை புறவழிச் சாலை, கல்லணை சாலை, தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு பகுதிகள்.
சிறுகனூா்: சிறுகனூா், ஆவாரவள்ளி, திருப்பட்டூா், சி.ஆா்.பாளையம், எம்.ஆா். பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெய்குளம், நெடுங்கூா், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே. பூங்கா, ஸ்ரீதேவிமங்கலம், கூத்தனூா், கொளக்குடி, கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.