திருச்சி

வீடு புகுந்து நகைகள் கொள்ளை

DIN

திருச்சியில் வீடு புகுந்து நகைகளைப் பறித்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி கே.கே.நகா், எல்ஐசி காலனி, சண்முகா நகா் பகுதியைச் சோ்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறாா். கணவா் வெளிநாட்டில் உள்ள நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில், தாயும், மகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமாா் 3 மணியளவில் அவா்களது வீட்டின் கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மா்ம நபா் பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, அவரின் நகைகளை பறித்தாா். பின்னா் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினாா். புகாரின்பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT