பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
ஜங்ஷன் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு திருச்சி மாவட்ட தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். எல்.ஐ.சி. முகவா்கள் பலா் பங்கேற்றனா்.
இதில், பாலிசிக்கான போனசை உயா்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயா்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவா்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.