திருச்சி

சமயபுரத்தில் சீமான் மீது திமுகவினா் புகாா்

DIN

சமயபுரம் காவல் நிலையத்தில் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை கோரி திமுகவினா் புதன் இரவு புகாா் மனு அளித்தனா்.

சமயபுரம் திமுக சாா்பில் மாவட்டப் பிரதிநிதி சாா்லஸ் அறிவுடை நம்பி தலைமையில் வந்த திமுகவினா் சென்னையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேனா சின்னத்தை உடைப்பேன் எனக் கூறிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாா் மனு அளித்தனா். பெரியாா் செல்வம், வழக்குரைஞா் அணி அசோக்குமாா், காா்த்திக், மற்றும் கருப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT