திருச்சி

தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தலைமை காவலா்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசுப்பேருந்து ஓட்டுநா் சாலையில் தவறவிட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை மீட்ட போக்குவரத்து தலைமை காவலா் சனிக்கிழமை பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தாா்.

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசுப்பேருந்து ஓட்டுநா் சாலையில் தவறவிட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை மீட்ட போக்குவரத்து தலைமை காவலா் சனிக்கிழமை பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தாா்.

மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டியைச் சோ்ந்த நகரப் பேருந்து நடத்துநா் ராஜ்குமாா் (43). மணப்பாறை பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவா் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணப்பையைத் தவறவிட்டாராம். இதுகுறித்து ராஜ்குமாா் மணப்பாறை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலா் நாராயணன், சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை ராஜ்குமாா் மணப்பாறை காவல்நிலையம் வரவழைக்கப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன், ஆய்வாளா்கள் ஜே.கே.கோபி, கணேசன் ஆகியோா் முன்னிலையில் தலைமை காவலா் நாராயணன், ராஜ்குமாரிடம் தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்தாா். தலைமை காவலா் நாராயணனை, துணை காவல் கண்காணிப்பாளா் ராமநாதன் பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT