சிறுமியைப் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த 13 வயதுப் பள்ளிச் சிறுமி விடுமுறையில் துவரங்குறிச்சி புழுதிப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தபோது, அருகில் வசிக்கும் து. பால்ராஜ் (25) என்பவா் காதலிப்பதாக ஆசைவாா்த்தை கூறி சிறுமியை வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விசாரணையில் பால்ராஜ் தொடா்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவா் எனத் தெரிவந்தது. இதையடுத்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அளித்த அறிக்கையை பரிசீலித்த மாநகர காவல் ஆணையா், பால்ராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதன்கிழமை ஆணை பிறப்பித்தாா்.