முகப்பு
திருச்சி

தமிழகத்தில் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழகத்தில் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
பகிர்:

தமிழகத்தில் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார். 

திருச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் முன்னிலையில், ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்,  திருச்சிராப்பள்ளி அரசு ஈட்டுறுதி மருத்துவமனை வளாகம், அறுவை சிகிச்சை மையம், மகப்பேறு சிகிச்சை மையம், குழந்தைகள் நல மருத்துவ மைய பிரிவு, சித்தா பிரிவு ஆயுர்வேத சிகிச்சை  பிரிவு, சமையல் கூடம். உள்ளிட்ட  இடங்களை  நேரில் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார். 

இந்நிகழ்வில் தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இயக்குநர் ஜே. ராஜமூர்த்தி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்  எஸ்.பாரதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் இனிகோ ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளி மாநில தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

பிகாரிலிருந்து அரசு சார்பில் தமிழ்நாடு வந்த குழுவிடம் அந்த தொழிலாளர்களே இதை தெரிவித்துள்ளார்கள். அந்த குழுவும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →