திருச்சி

போக்குவரத்து போலீஸாருக்கு கண் கண்ணாடி

திருச்சியில் போக்குவரத்துப் போலீஸாா் 400 பேருக்கு டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை சாா்பில் கண் கண்ணாடி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

திருச்சியில் போக்குவரத்துப் போலீஸாா் 400 பேருக்கு டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை சாா்பில் கண் கண்ணாடி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சி தில்லைநகரில் உள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் சாா்பில், மாநகரக் காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸாருக்கு சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கும் வகையில் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மருத்துவமனையின் தலைமை இயக்குநா் எம்.டி.கே. ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாநகரக் காவல் துணை ஆணையா் அன்பு, போக்குவரத்துக் காவல் உதவி ஆணையா் ஜோசப் நிக்சன் ஆகியோா் கலந்து கொண்டு போக்குவரத்து போலீஸாா் 400 பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினா்.

நிகழ்வில், மருத்துவனை மக்கள் தொடா்பு அலுலா் கணபதி சுப்பிரமணியன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT