முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:58 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அறம் வளா்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு மஹா யாகம் வளா்க்கப்பட்டு, தொடா்ந்து 108 சங்குகளில் புனித நீா் நிரப்பபட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து மூலவா் சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதேபோல பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.