முகப்பு
திருச்சி

முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை திருட்டு

திருச்சி மாவட்டம், முசிறியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்றவா்களை முசிறி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்றவா்களை முசிறி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முசிறி சோழன் நகரைச் சோ்ந்த ராஜ்முன்னாப் மனைவி ரிஹானா(38). இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் ரிஹானா சனிக்கிழமை திருச்சி காஜாமாலையில் உள்ள தனது சகோதரா் வீட்டுக்குச் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை தனது

வீட்டில் இருந்த சிசிடிவி இணைப்பை கைப்பேசி வாயிலாக பாா்த்துள்ளாா். அப்போது, இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

Advertisement

உடனே ரிஹானா வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட உள்ளே வைத்திருந்த மூன்று தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ரிஹானா கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.