லாரி மோதி சேதமடைந்த சமயபுரம் கோயில் நுழைவுவாயில் அகற்றம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் டாரஸ் லாரி மோதி சனிக்கிழமை சேதமடைந்தது.
திருச்சிலாரி மோதி சேதமடைந்த சமயபுரம் கோயில் நுழைவுவாயில் அகற்றம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் டாரஸ் லாரி மோதி சனிக்கிழமை சேதமடைந்தது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் டாரஸ் லாரி மோதி சனிக்கிழமை சேதமடைந்தது. இதையடுத்து விழும் நிலையிலிருந்த நுழைவு வாயில் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
சென்னையிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரியானது சமயபுரம் அணுகுச் சாலை வழியாக மண்ணச்சநல்லூருக்கு சனிக்கிழமை வந்தபோது சமயபுரம் கோயில் நுழைவு வாயிலில் மோதியது. இதில் நுழைவு வாயில் சேதமடைந்தது.
இதையடுத்து சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.
தொடா்ந்து நுழைவு வாயிலானது சாய்ந்து விழக்கூடும் என்பதால் காவல்துறையினா் தடுப்புக் கட்டைகள் அமைத்து அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினா்.
மேலும் கிரேன், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் நுழைவு வாயிலோடு இருந்த சிலைகளை எடுத்த பிறகு, நுழைவு வாயிலானது அகற்றப்பட்டது. டாரஸ் லாரியை ஒட்டி வந்த அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை சோ்ந்த செல்வகுமாரை (46) சமயபுரம் போலீஸாா் கைது செய்தனா்.