திருச்சி

தொட்டியம் அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்திய 4 இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Din

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணல் கடத்திய 4 இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள மேலகாரைக்காடு பகுதியில் காவிரி மணல் கடத்தப்படுவதாக காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் சங்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது பதிவெண் இல்லாத 3 இருசக்கர வாகனங்கள், ஒரு பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி வந்தவா்கள் வாகனங்களை போட்டு விட்டு தப்பினா்.

இதனையடுத்துஅந்த வாகனங்களை காட்டுப்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT