FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமிபூஜை

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 6:10 am IST
- கோப்புப்படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த எம். புதுப்பட்டியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

எம்.புதுப்பட்டி ஊராட்சி தொப்பலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 8 திருநங்கைகளுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட எம்.புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமையில் பூமிபூஜை விழா நடைபெற்றது. நிகழ்வில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் பரணிதரன், மேற்பாா்வையாளா் நடராஜன், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சசிகுமாா், தொண்டா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் காா்த்திக், பயனாளிகளான திருநங்கைகள் மேரி அம்மா, ராசாத்தி, அா்ச்சனா, அகல்யா, சிம்ரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments