முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டில்களில் ரூ. 65 லட்சம் காணிக்கை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 65 லட்சம் காணிக்கை வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:41 PM
பகிர்:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 65 லட்சம் காணிக்கை வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 65 லட்சத்து 16ஆயிரத்து 762 ரொக்கம், தங்கம் 1 கிலோ 578 கிராம், வெள்ளி 1 கிலோ 781கிராம், 99 வெளிநாட்டுப் பணத்தாள்கள், 834 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக வந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →