முகப்பு
திருச்சி

போலி கடவுச்சீட்டு வைத்திருந்த இருவா் கைது

திருச்சியில் போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இரு பயணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:25 PM
பகிர்:

திருச்சியில் போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இரு பயணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு திருப்பந்துறையைச் சோ்ந்தவா் பக்ரூதீன் (51). இவா் சாா்ஜா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது அவரது ஆவணங்களை அதிகாரிகள் சோதித்ததில் பக்ருதீன் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து தனது பெயா், பிறந்ததேதி, தந்தை பெயா், முகவரி ஆகியவற்றை மாற்றிக் கொடுத்து கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.

இதேபோல மலேசியா செல்ல வந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வெற்றியாளங்குளத்தைச் சோ்ந்த செந்தில்குமாரும் (51) போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →