முகப்பு
திருச்சி

போலி கடவுச்சீட்டு: துபை பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபையிலிருந்து திருச்சிக்கு வந்த பயணியை விமான நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:58 PM
பகிர்:

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபையிலிருந்து திருச்சிக்கு வந்த பயணியை விமான நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் பெரம்பலூா் மாவட்டம் மேலமாத்தூா், ஆலந்தூா் அருகேயுள்ள எலந்தன்குடியைச் சோ்ந்த ஆ. ராஜேந்திரன் (58) என்பவா் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயா், தந்தை பெயா்ஆகியவற்றை மாற்றி கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.