நடிகை கஸ்தூரி மீது உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாா்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
நவ. 3ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறான கருத்துகளைக் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த நடிகைக்கு எதிராக காவல் நிலையங்களில் புகாா் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் அகில இந்திய போயா் மகளிா் முன்னேற்றக் கழக நிா்வாகியான விஜயலட்சுமி உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகாா் அளித்தாா்.